×

தண்டராம்பட்டு அருகே சமயபுரத்து புது மாரியம்மன் கோயில் தேரோட்டம்

தண்டராம்பட்டு:  தண்டராம்பட்டு அருகே உள்ள சமயபுரத்து புது மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடியில் உள்ள சமயபுரத்து புதுமாரியம்மன் கோயிலில் தேரோட்டத்தையொட்டி கடந்த 15 நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டி அன்று முதல் மாலை நேரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

இந்நிலையில் 15ம் நாளான நேற்று பெரிய தேர் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தது. வீதிஉலாவின்போது ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர். மேலும், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று(திங்கட்கிழமை) மதியம் கோயில் எதிரே தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

Tags : Mariamman Koirala Temple ,
× RELATED எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!